
(நாட்டுக்கு புதிய முகம் ஒன்று தேவைப்படுகிறதாம் – கூறுகிறார் சம்பிக்க)
எதிர்காலத்தில் புதிய முகம் ஒன்று நாட்டுக்கு கிடைக்க வேண்டும் என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரரை இன்று காலை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் குறுகிய கால பொருளதார வேலைத்திட்டம் ஒன்றை தாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கவுள்ளதாக அவர் இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். MN
Leave a Reply