• Sun. May 24th, 2026

Month: October 2024

  • Home
  • இன்னும் சில நாட்களில் நிலைமை வழமைக்கு திரும்பும்

இன்னும் சில நாட்களில் நிலைமை வழமைக்கு திரும்பும்

இன்னும் சில நாட்களில் ஏற்பட்டுள்ள நிலைமையை தணிக்க முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இந்த நிலையை…

முழு நாட்டின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட…

பிரதமருடன் முதல் சந்திப்பு!

பாதுகாப்பு குழுக்களின் பிரதானி ஷவேந்த்ர சில்வா, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே, கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில்…

(EDB) பணிப்பாளராக, ஹமீட் அஷ்ரப் ஜனாதிபதியினால் நியமனம்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் (EDB) பணிப்பாளராக, ஹமீட் அஷ்ரப் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஹமீட் அஷ்ரஃப் ஃபேன்டாசியா எலாஸ்டிக்ஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார் மற்றும் குறுகிய துணி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் 35 வருட அனுபவத்தை உயர்மட்ட…

குழந்தையை காப்பாற்றுவதற்காக, உயிரை விட்ட தாய்

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹர பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக தாய் உயிரை விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மின்சார இணைப்பிற்குள் ஆணியை பொருத்திய தனது இரண்டரை வயது குழந்தையை காப்பாற்ற முற்பட்ட தாயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் லுனுகம்வெஹர பிரதேசத்தில் வசித்த 28 வயதுடைய…

நவம்பர் 14 பாராளுமன்றத்தை சுத்தம்செய்ய, சிரமதானம் நடத்தப்படும் – ஜனாதிபதி

நவம்பர் 14 என்பது இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதானம் நடத்தப்படுகின்ற நாளாகும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம்…

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வாருங்கள் – சுற்றுலாப் பயணிகளுக்கு அன்பான அழைப்பு

எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு வாருங்கள் – சுற்றுலாப் பயணிகளுக்கு அன்பான அழைப்புஎந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச…

நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை

பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார். உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சுகாதார…

அறுகம்பே விவகாரம் – ஐக்கிய இராச்சியம் விடுத்துள்ள அறிவிப்பு

அறுகம்பே பகுதிக்கான அமெரிக்க தூதரகம் வழங்கிய பயண எச்சரிக்கையின் அடிப்படையில் ஐக்கிய இராச்சியம் இலங்கைக்கான தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. அருகம்பேயில் உள்ள சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தகவல்…

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…