• Sun. May 24th, 2026

சந்தேக நபரை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்

Byadmin

Nov 23, 2023

நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜா-எல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஜா-எல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் குழு ஒன்று சென்ற போது, குறித்த சந்தேகநபர் நீரோடையில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவரை பிடிக்க 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் நீரோடையில் குதித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இந்நிலையில், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் ஜா -எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *