மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை இன்று (27) , நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நடைபெறாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான பரீட்சையை அடுத்த மாதம் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் பரீட்சைகள் நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.