(உலகின் அதிசிறந்த புகைப்படத்துக்கான சுற்றுலா நகரமாக கொழும்பு தெரிவு)
2019ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த புகைப்படத்துக்கான சுற்றுலா நகரமாக, இலங்கையின் தலைநகரான கொழும்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வெளியாகும் “மிரர்” எனும் பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட தெரிவு கணக்கெடுப்பின்படி, கொழும்புக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு விசேடமாக, உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான வலைத்தளங்களில் (1.3 மில்லியன் சமூக வலை பதிவுகள்) , சுற்றுலாத்துறையில் முக்கிய கேந்திர நிலையமாக கொழும்பு மாநகர் கணக்கெடுப்பின்படி முன்னிலையில் விளங்குவதாகவும் குறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://www.thesun.co.uk/travel/8185353/sri-lanka-columbo-named-must-photograph-destination-2019/