(மருதமுனையில் மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளி வாசல் திறந்து வைக்கும் நிகழ்வு)
பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் ஏற்பாட்டில் மருதமுனை
65 மீட்டர் வீட்டுத்திட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் சுன்னா ஜூம்ஆ பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு நாளை ஜூம்ஆ(01-03-2019)தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் பரகஹதெனிய ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் என்.பி.எம்.அபுபக்கர் சித்தீக் மதனி பிரதம அதிதயாககக் கலந்து பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.
இங்கு வாழ்கையே வணக்கமாக என்ற தலைப்பில் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தவுள்ளார்.
புதிதாக நிர்மானிக்கப்பட்ட பள்ளிவாசலைப் படத்தில் காணலாம்
-பி.எம்.எம்.ஏ.காதர்-