• Sun. Oct 12th, 2025

2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

Byadmin

Apr 18, 2019

புத்தாண்டு காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நுகர்வோருக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 2,208 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமை, மின் உபகரணங்களுக்கான உத்தரவாதம் இன்றி விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் விலைகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் வர்த்தகர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 7,000 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 5,600 க்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *