• Mon. Oct 13th, 2025

பயணத்தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் நடந்துக்கொண்ட விதம் வேதனையை தருகிறது.

Byadmin

May 26, 2021

பயணத் தடை தளர்த்தப்பட்ட காலப்பகுதியில் சிலர் நடந்துக்கொண்டவிதம் வேதனையை ஏற்படுத்துவதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று பல்வேறு சுகாதார அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் சில தர்பபினர் இதனை கடைப்பிடித்து செயற்படவில்லை எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டினார்.
பொது மக்களின் அலட்சியம் கொரோனா வைரஸ் தொற்றை மீண்டும் பரப்பக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எதிர்வரும் காலத்தில் பயணத்தடையை தளர்த்துவது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றின் ஊடாக தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராணுவத்தளபதி இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *