• Sun. Oct 12th, 2025

நாமல் ராஜபக்சவின் புதிய ராஜாங்க அமைச்சு! ஒதுக்கப்பட்டுள்ள ஆறு அரச நிறுவனங்கள்

Byadmin

Jun 5, 2021

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பொறுப்பின் கீழ் உள்ள டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் நிறுவனங்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சுக்கான நிறுவனங்கள் சம்பந்தமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கை தர கட்டுப்பாட்டு நிறுவனம் உட்பட 6அரச நிறுவனங்கள் இந்த ராஜாங்க அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார். கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனம், தேசிய விஞ்ஞான தொழிற்நுட்ப ஆணைக்குழு , அனைத்து தகவல் தொழிநுட்ப பூங்காக்கள், ஸ்ரீலங்கா இன்ஸ்டியூட் ஒப் நெனோ டெக்னோலேஜ் பிரைவட் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் நாமல் ராஜபக்சவின், புதிய ராஜாங்க அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனிடையே கொழும்பு துறைமுக நகர ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *