• Sun. Oct 12th, 2025

இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை பஹ்ரெய்ன் இடைநிறுத்தியது

Byadmin

Jun 14, 2021

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புகளுக்கான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரெய்ன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரெய்ன் மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதற்கு பஹ்ரேய்ன் தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் அந்த நாட்டு பிரஜைகளுக்கு இந்த தடை செல்லுபடியாகதென தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்க பஹ்ரெய்ன் மருத்துவ குழு அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *