• Tue. Apr 7th, 2026

போர்ட் சிட்டியை பார்வையிட ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 90 ஆயிரம் பேர் திரண்டனர்

Byadmin

Jan 18, 2022

கொழும்பு – போர்ட் சிட்டியை பார்வையிட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 89,500க்கும்அதிகமானோர் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வது இராஜதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9 அன்று  கொழும்பு – போர்ட் சிட்டியில் 500 மீட்டர் பொது நடைபாதை திறக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 10ஆம் திகதி முதல் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை போர்ட் சிட்டி பாதையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *