• Sun. Oct 12th, 2025

நாட்டில் பல பகுதிகளில் மின்தடை

Byadmin

Feb 1, 2022

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது மின்பிறப்பாக்கி மீண்டும் செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மின்பிறப்பாக்கி நேற்று (31) திருத்தியமைக்கப்பட்டதாக தெரிவித்த இலங்கை மின்சார சபை, அதன் பின்னர் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த செயலிழப்பு காரணமாக தேசிய மின்கட்டமைப்பு 270 மெகாவாட் மின்சாரத்தை இழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுரைச்சோலையில் உள்ள மின்பிறப்பாக்கி செயலிழந்ததன் காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபையின் வட்டாரங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *