• Sat. Oct 11th, 2025

மார்ச் 1 முதல் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு புறப்படுவோருக்கான அறிவித்தல்

Byadmin

Feb 27, 2022

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு  இராச்சியத்துக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மார்ச் 1 ஆம் திகதி முதல் புறப்படுவதற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்பட வேண்டிய அவசியமில்லை என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள அனைத்து முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்கும் புறப்படும் விமானங்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

எவ்வாறெனினும் கொவிட் தடுப்பூசியில் ஒரு டோஸினை மாத்திரம் பெற்ற பெற்ற பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் இரண்டாவது டோஸினை பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *