• Sun. Oct 12th, 2025

நாட்டில் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

Byadmin

Mar 15, 2022

நாட்டில் கடந்த வாரங்களாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினமும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதனடிப்படையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலய பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப் பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் மின்தடை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *