• Sun. Oct 12th, 2025

பங்களாதேஷின் 51 வது சுதந்திரதினம்

Byadmin

Mar 27, 2022

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (26) கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதோடு. அது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக அமையப்பெற்றிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *