• Sat. Oct 11th, 2025

எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது – லிட்ரோ நிறுவனம்

Byadmin

Mar 30, 2022

சமையல் எரிவாயு போட்டி நிறுவனம் விலையை சடுதியாக அதிரித்துள்ள காரணத்தினால் லிட்ரோ நிறுவனமும் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.  

விலையதிகரிப்பு கோரிக்கையை நிதியமைச்சிடம் முன்வைத்துள்ளோம் வெகுவிரைவில் சாதகமாக பதிலை எதிர்பார்க்கிறோம். என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜெயசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் புதன்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிவாயு இறக்குமதியில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைக்கு தீர்வு காண லிட்ரோ நிறுவனம் கடந்த 10 வருடகாலமாக விலைக்கட்டுப்பாட்டு முறைமையின் கீழ் சேமித்த சுமார் 9 பில்லியன் நிதியை முதலிட்டு சிக்கல் நிலைமையை முகாமைத்துவம் செய்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலைமைகளுக்கு மத்தியில் லிட்ரோ நிறுவனம் கடந்த 6மாத காலப்பகுதியில் 500 மில்லியன் இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் அரச திறைச்சேரியின் ஒத்துழைப்பு இல்லாமல் நிதி நெருக்கடியினை எம்மால் முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடிந்துள்ளது.

வழமையான நாட்களை காட்டிலும் தற்போது நாளாந்தம் சுமார் 1 இலட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. 

இருப்பினும் சந்தையில் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

லிட்ரோ நிறுவனத்தின் போட்டி நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு சந்தையில் அதிக கேள்வி எழுந்துள்ளது.

விலையதிகரிக்கப்படாத பட்சத்தில் தற்போது ஒரு சிலிண்டர் விநியோகத்தின் ஊடாக 1600 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்கிறோம்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதாலும் இதுவரையில் 4.5 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளோம்.

தவிர்க்க முடியாத காரணத்தினால் லிட்ரோ நிறுவனமும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என நிதியமைச்சின் ஊடாக அமைச்சரவைக்கு அறிவுறுத்தியுள்ளோம். 

சமையல் எரிசாயு சிலிண்டர் விலையேற்றத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி பெறவேண்டிய தேவை கிடையாது.

அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *