ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பலவீனமடைவதற்கு அரசாங்கத்தின் ஒரு தரப்பினரது முறையற்ற செயற்பாடுகள் பிரதான காரணியாக அமைந்தது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.