• Sun. Oct 12th, 2025

கொழும்பில் நாளை ஆர்ப்பாட்டங்களுக்கு தடை : கோட்டை நீதிமன்றம் உத்தரவு

Byadmin

May 27, 2022

கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு உள்நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச கட்டடங்களுக்கும் உள்நுழைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *