• Sun. Oct 12th, 2025

எரிசக்தி அமைச்சர் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவு!

Byadmin

May 28, 2022

நாட்டிற்கு நாளைய தினம் (29) டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரித்துள்ளார்.

மேலும், கச்சா எண்ணெய் தொகையொன்று தற்போது தறையிறக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், நாட்டில் தற்போது 17,077 மெட்ரிக் தொன் டீசலும், 1,072 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும், 37,391 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் மற்றும 6,142 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் இருப்பில் உள்ளதாக அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *