பம்பலப்பிட்டியில் தனிநபர் ஒருவருக்கு கேன்களில்
எரிபொருளை வழங்கிய எரிபொருள் பவுசருக்கு எதிராக இன்று கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த தவறான நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட டிரான்ஸ்போர்ட்டருக்கு எதிராக நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி கடுமையான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. என லங்கா ஐ.ஓ.சி மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருளை இறக்கியமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் CEYPETCO மற்றும் LIOC ஆகிய மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப் பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.