• Mon. Oct 13th, 2025

நேற்று செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் கடனை, இலங்கையினால் மீண்டும் செலுத்த முடியவில்லை

Byadmin

Jul 26, 2022

நேற்றைய தினம் (25) செலுத்த வேண்டிய ஒரு பில்லியன் டொலர் சர்வதேச கடனை இலங்கை அரசாங்கத்தினால் செலுத்த முடியாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை 2012 இல் பெற்ற ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட சர்வதேச இறையாண்மைப் பத்திரம் நேற்றைய நிலவரப்படி முதிர்ச்சியடைந்துள்ளது.

எனினும், டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையால் அதனை செலுத்த முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, வெளிநாட்டு உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றை செலுத்தப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *