இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய ஜூன் மாதத்திற்கான முதன்மை பணவீக்கம் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கம், 2022 மே மாதத்தில் 45.3 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவுப் பணவீக்கம் அதிகரிப்பு
அதற்கமைய, உணவுப் பணவீக்கம், 2022 மே மாதத்தில் 58.0 சதவீதத்திலிருந்து 2022 ஜூனில் 75.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உணவுப் பணவீக்கம் (Y-o-Y) மே 2022 இல் 58.0 வீதத்திலிருந்து ஜூன் 2022 இல் 75.8 வீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் (Y-o-Y) 2022 மே மாதத்தில் 34.2 வீதத்திலிருந்து, 2022 ஜூன் மாதத்தில் 43.6 வீதமாக அதிகரித்துள்ளது.
ஜூன் 2022 இல் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்திர மாற்றம் 10.91 வீதமாக பதிவாகியுள்ளது, ஏனெனில் உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் முறையே 7.25 வீதம் மற்றும் 3.66 வீதம் விலை உயர்வு காணப்பட்டது.