• Sun. Oct 12th, 2025

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல்..

Byadmin

Aug 31, 2022

இந்த வருடத்தின் இரண்டாம் தவணை விடுமுறை செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரையில் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இரண்டாம் தவணை விடுமுறை 05 நாட்கள் மாத்திரமே வழங்கப்படவுள்ளது.

மேலும், மூன்றாம் பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 03 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி மூன்றாம் தவணை விடுமுறை 29 நாட்கள் வழங்கப்படவுள்ளது.

அந்தக் காலப்பகுதியில் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *