• Sun. Oct 12th, 2025

கால்பந்து மைதான கலவரத்தில் 130 பேர் உயிரிழப்பு, 180 பேர் காயம் – இந்தோனேசியாவில் அவமானம்

Byadmin

Oct 2, 2022

இந்தோனேசியாவின் கால்பந்து மைதானத்தில் இடம்பெற்ற கலவரத்தில் 130 பேர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள நடந்த கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 34 பேர் மைதானத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் இரண்டு பொலிஸார் உட்பட 93 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 180 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *