• Thu. Oct 16th, 2025

வெளிநாடுகளில் இருந்து தசைப்பிடிப்பு நிபுணர்களை அழைத்து வர தீர்மானம்

Byadmin

Nov 8, 2022

வெளிநாடுகளில் இருந்து அனுபவமிக்க தசைப்பிடிப்பு நிபுணர்களை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அனுபவமிக்க தசைபிடிப்பு நிபுணர்கள் இன்மையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தசைப்பிடிப்பு நிபுணர்களை தமது அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட விருந்தகங்களில் மாத்திரம் அனுமதிக்க அந்த அதிகார சபை தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கும் அனுபவமிக்க தசைப்பிடிப்பு நிபுணர்கள் இன்மையால் பிரதான விருந்தகங்களில் உள்ள பல தசைப்பிடிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதன்படி, பிரதான விருந்தகங்களின் கோரிக்கைக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து தசைப்பிடிப்பு நிபுணர்களை அழைத்து வர அனுமதி வழங்கியதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். JM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *