• Sun. Oct 12th, 2025

நீச்சல் தடாகத்தில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Byadmin

Nov 13, 2022

கல்கிஸை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்குள்ள நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்தபோது அவர் மதுபானம் அருந்தியிருந்தமை தெரிய வந்துள்ளது.

வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குறித்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,. இந்தச் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *