• Sat. Apr 4th, 2026

ஏவுகணைகள் வீசி 2022 க்கு விடை கொடுத்த வட கொரியா

Byadmin

Jan 1, 2023

கொரிய தீபகற்பத்தின் கிழக்கே கடலை நோக்கி 3 குறுகிய தூர ஏவுகணைகளை பரிசோதனை செய்து 2022-ம் ஆண்டுக்கு வடகொரியா விடை கொடுத்துள்ளது.

தென் கொரிய வான் எல்லைக்குள் ஆளில்லா விமானங்களை அனுப்பி வைத்த 5 தினங்களில் இந்த ஏவுகணை பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது. 2017க்குப் பிறகு இத்தகைய நடவடிக்கையில் வட கொரியா இறங்கியது இது முதல் முறை.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 2022ம் ஆண்டில்தான் வடகொரியா மிக அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

வட கொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளால் தனக்கோ, தனது கூட்டாளிகளுக்கோ எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு தெற்கே, வடக்கு ஹூவாங்கே மாகாணத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு 3 குறுகிய தூர ஏவுகணைகளும் செலுத்தப்பட்டிருப்பதாக தென்கொரிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

“வட கொரியாவின் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்தின் அமைதியையும், நிலைத்தன்மையையும் சீர்லைக்கக் கூடிய ஆத்திரமூட்டும் செயல்,” என்றும் தென்கொரியா கூறியுள்ளது.

வடகொரியா பரிசோதித்த ஏவுகணைகள் சுமார் 350 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு ஏவுகணை கடலில் விழுந்ததாக ஜப்பான் கடலோர காவல் படை முன்னதாக கூறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *