• Sat. Oct 11th, 2025

தனியார் பேருந்து மீது கெப் மோதி கோர விபத்து!

Byadmin

Feb 27, 2023


பயணிகளை ஏற்றுவதற்காக தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் ரக வண்டி ஒன்று பேருந்து மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று அனுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அப்போது, ​​பேருந்தின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பயணப் பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது, ​​அதிவேகமாக வந்த கெப், பேருந்தின் பின் பகுதியில் மோதிய நிலையில் அங்கு பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்த மூன்று பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *