• Wed. Apr 8th, 2026

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Byadmin

Mar 14, 2023


அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தேர்வின் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பரீட்சை திணைக்களம் ஏற்கனவே எடுத்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் பற்றாக்குறைக்கு தேவையான பட்டதாரிகள் கணக்கிடப்பட்டு அந்த வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.

மாகாண அடிப்படையில் உருவாகும் வெற்றிடங்களுக்கு மாகாண சபைகள் வருடாந்தம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *