ஹம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (24) அதிகாலை 12.45 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.