• Fri. Nov 28th, 2025

ஜனாதிபதியின் அறிவிப்பு

Byadmin

May 14, 2023


செயற்கை நுண்ணறிவு போன்ற தொழிநுட்ப வளர்ச்சியுடன் உலகம் முழுவதுமே அறிவுப் புரட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் கொழும்பு பல்கலைக்கழகம் 10 ஆண்டு கால அபிவிருத்தித் திட்டத்தை முன்வைத்தால் அதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான பழைய மாணவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு சிகரம் விருது வழங்கும் விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் தனித்துவமான பணியை ஆற்றும் பழைய மாணவர்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் முதலாவது விருது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *