• Fri. Nov 28th, 2025

குழந்தைகளை நாசமாக்கும் ஸ்மார்ட்போன் – புதிய ஆய்வில் வெளியான தகவல்கள்

Byadmin

May 20, 2023

கட்டமைப்பில் இருப்பதால் ஏற்படும் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

என்ன செய்யவேண்டும்?
கடந்த ஆண்டு, சமூக ஊடக நிறுவனங்கள் தொடர்பான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது.

”இந்தியாவில் 53 கோடி வாட்ஸ்அப் பயனாளர்களும், 44.8 கோடி யூடியூப் பயனாளர்களும், 41 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களும் உள்ளனர். 1.75 கோடி பேர் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர்,” என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

அதேநேரத்தில், இந்தியாவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 90 கோடியாக அதிகரிக்கலாம்.

தொழில்நுட்பம் இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இது தகவல்களின் சிறந்த ஆதாரமாக இருக்கும் அதேவேளையில், அது பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இதை , சீரான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

வல்லுநர்கள் பெற்றோருக்கு இந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள்:

சிறு குழந்தைகளை திறன்பேசியில் இருந்து விலக்கி வையுங்கள்
குழந்தைக்கு எந்த வயதில் திறன்பேசி அல்லது டேப்லெட் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்
தன் நண்பர் திறன்பேசி வைத்திருப்பதாக குழந்தை வாதிட்டால், அதனுடன் பேசி விளக்குங்கள்
குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் ஒரு தொலைபேசி இணைப்பை(லேண்ட்லைன்) வையுங்கள் அல்லது பேசவும் செய்தி அனுப்பவும் மட்டுமே முடியக்கூடிய கைபேசியைக் கொடுங்கள்
குழந்தையின் படிப்புக்கு மொபைல் அவசியம் என்றால், திரை நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்
பள்ளிகளில் வீட்டுப் பாடங்களை ஆன்லைனில் செய்யும்படி கொடுத்தால், ஒரு பிரிண்டரை வாங்குங்கள். ஏனெனில் இது குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கும்.
குழந்தைகளுக்கு எவ்வளவு காலம் கழித்து திறன்பேசிகள் கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு குறைவாக அவர்களின் மனநல பாதிப்பு இருக்கும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *