• Sat. Oct 11th, 2025

மின் கட்டணம் – வௌ்ளிக்கிழமை இறுதி தீர்மானம்

Byadmin

Jun 28, 2023


மின்சாரக் கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழு எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கூடி அது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதுடன், அது தொடர்பான யோசனைக்கு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நடவடிக்கை நேற்று (27) நிறைவடைந்துள்ளதுடன், அது தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தற்போது ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *