• Fri. Nov 28th, 2025

2 காரணங்களுக்காக தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு செல்லும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது

Byadmin

Sep 3, 2023

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது, அண்மைக்காலமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார்வையாளர்களின் அதிகரிப்புகுறித்து குறித்து மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடுவ தெரிவிக்கையில் : 

பார்வையாளர்களின் அதிகரிப்புக்கு பல்வேறு காரணிகள் உள்ளன . பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கான காரணங்களில் ஒன்று, 

கடுமையான வெப்பத்தின் தாக்கமாகும். மிருகக்காட்சிசாலையானது அதன் அடர்த்தியான பசுமையாக மற்றும் நிழல் நிறைந்த பகுதிகளுடன் குளிர்ச்சியான காணப்படுவதால் ஏராளமானோர் ஓய்வுக்கு வருகின்றனர் . 

பார்வையாளர்களின் வருகைக்கு மற்றொரு காரணம் எங்கள் சிங்கக் குட்டி சிம்பா. இந்த குட்டி சிங்கத்தை காண பார்வையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *