• Mon. Oct 13th, 2025

மருந்து எடுத்துக் கொண்டு, வைத்தியரின் ஆப்பிள் போனை திருடிச்சென்ற நோயாளி

Byadmin

Oct 5, 2023

கொழும்பு புளூமெண்டால் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமெண்டால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டால் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இந்தக் கைத்தொலைபேசியை திருடியவர் இதுவரை சிக்காத நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *