• Wed. Jun 10th, 2026

15 மணித்தியால நீர்வெட்டு!

Byadmin

Oct 21, 2023

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று மாலை 05.00 மணி தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு வலுசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *