• Wed. Jun 10th, 2026

9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்த பணிப்பாளர்

Byadmin

Oct 28, 2023

இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியின்றி போலி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேகநபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபருக்கு எதிராக   நம்பிக்கை துரோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *