• Sun. Oct 12th, 2025

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Byadmin

Dec 4, 2023

தற்போது பெறுபேறுகள் வெளியாகியுள்ள சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (4) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மீள்திருத்தம் 

இதன்படி, மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஒன்லைன் முறை மூலம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் கடந்த முதலாம் திகதி வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், அனைத்துப் பாடசாலை பரீட்சார்த்திகளின் அச்சிடப்பட்ட பெறுபேறு சான்றிதழ்கள், குறித்த அதிபர்களுக்கும் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் பெறுபேறு சான்றிதழ்கள் பரீட்சார்த்திகளுக்கும் மீள் மதிப்பீட்டுக்கு பின்னர் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *