களனி பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களனிப் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதன் நிர்வாகம் நேற்று (04) நடவடிக்கை எடுத்திருந்தது.
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைத்து தாக்கப்பட்டு, அதன் நுழைவு வாயிலில் கட்டிவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்வி சாரா ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்களுக்கு வகுப்புத் தடை!
