• Sun. Oct 12th, 2025

தங்கம் கொண்டு வந்த பெண் 11 கோடி ரூபா அபராதம்!

Byadmin

Dec 23, 2023

சட்டவிரோதமான முறையில் 12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட இந்திய பெண்ணுக்கு 11 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (22) அதிகாலை டுபாயில் இருந்து வந்த குறித்த பெண், 5 கிலோ 500 கிராம் தங்கத்துடன் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை பறிமுதல் செய்ய சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 11 கோடியே 80 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த பெண் அபராதத்தை செலுத்தியதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *