தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் அடித்து கொல்லப்பட்டார்.
இக்கொலை நேற்று (12) சிறிபாகம – தெற்கு மல்கெல்ல – தவனாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மல்வத்தை – இலுக்வத்தை – கிலிமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக்கொலை
