• Sat. Apr 4th, 2026

தரையில் விழுந்த ஆலங்கட்டிகள்

Byadmin

Mar 7, 2024

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று -06- மாலை பலத்த மழை பெய்துள்ளது.

மழையுடன் ஆலங்கட்டிகள் தரையில் விழுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

 பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் இந்த மழை பெய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக கனமழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *