• Wed. Apr 8th, 2026

பாராளுமன்றில் பலஸ்தீன சால்வையை அணிந்தார் சஜித்.

Byadmin

May 14, 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அவர் பலஸ்தீன கொடி மற்றும் இலங்கையின் தேசிய கொடி ஆகிய இரண்டு கொடிகளும் பொறிக்கப்பட்ட சால்வை அணிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (14), பலஸ்தீனம் மீதான தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பிரேரணை முன்வைத்து உரையாற்றினார். அதனை, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் வழிமொழிந்து உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *