• Sun. Oct 12th, 2025

ரயிலில் மோதி இளைஞன் பலி!

Byadmin

May 27, 2024

கட்டுகுருந்த மற்றும் களுத்துறை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் வீதியில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
21 வயதுடைய இளைஞர் ஒருவரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கட்டுகுருந்தவில் இருந்து களுத்துறை நோக்கி காதொலிப்பான் (handfree) ஒன்றை காதில் அணிந்து கொண்டு ரயில் வீதியில் பயணித்ததாக ரயில் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு குறித்த இளைஞன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *