• Mon. Oct 13th, 2025

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களால் சிறுநீரக நோய்கள்!

Byadmin

Jul 3, 2024

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டொக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த டொக்டர் இந்திரா கஹ்விட்ட,
“24 மணி நேரத்தில், நான் கிட்டத்தட்ட 60 நோயாளிகளை பரிசோதித்தேன்.  அதில் 10%, வெண்மையாக்கும் க்ரீமினால் ஏற்படும் பிரச்சனைகளுடன் வந்தனர். இவை நீண்ட காலமல்ல, குறுகிய கால பிரச்சினை. இப்போது நான் சில விஷயங்களைப் பார்க்கிறேன். உதாரணத்திற்கு, உள்ளங்கைகளின் உள்ளங்கால் கருப்பு நிறமாக மாறுகிறது. அனைத்திற்கும் பொதுவான காரணி வெள்ளையாக்கும் கிரீம்கள். மேலும், நகங்கள் பழுப்பு நிறமாக… ஆரஞ்சு நிறமாக மாறும்.  இவை முன்பை விட அதிகமாக காணப்படுகின்றன. குறுகிய கால பக்க விளைவுகள் அதிகரித்து வருகின்றன.  புற்றுநோய்க்கு முன் சிறுநீரகங்கள் மோசமடைந்து உயிர் சேதமும் ஏற்படுகிறது”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *