• Wed. Jun 10th, 2026

ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்திற்கான அழைப்பை திலித் ஏற்றார்!

Byadmin

Aug 20, 2024

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்தில் பங்கேற்க மார்ச் 12 இயக்கம் விடுத்த அழைப்பை உத்தியோகபூர்வமாக ஏற்று திலித் ஜயவீர பங்கேற்பார் என அவரது உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் தனிந்து விதானவாசம் PAFFREL அமைப்பிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு வாக்களித்தால் நாம் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடலைக் காண இலங்கையர்களுக்கு இந்த தளம் ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

இந்த விவாதத்தில் எனது சக வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்க்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் ஆகியோர் இந்த அழைப்பை ஏற்று கலந்து கொண்டு இந்த வரலாற்று நிகழ்வை யதார்த்தமாக்குவார்கள் என நான் நம்புகிறேன் எனவும் ஊடகப் பேச்சாளர் தனிந்து விதானவாசம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *