எங்கோ
யாரோ இருவருக்கு
மகளாக பிறந்தாள்
எனக்கு
மனைவியாக வந்த பின்பு
அவளுக்கென்று இருந்த
ஆசைகளை கனவுகளை
மறந்து விட்டாள்😢😢😢
இப்போது
நான் அழுதால் அழுகிறாள்
நான் சிரித்தால் சிரிக்கிறாள்
நான் துடித்தால் துடிக்கிறாள்
எனக்காகவே வாழ்கிறாள்❤❤❤
ருசியாக உணவு சமைத்து தருகிறாள்
ரகசியமாக காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈
காலையில்
நான் எழும்புவதற்கு முன்பு
அவள் எழுந்து விடுகிறாள்🌅
இரவில்
வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்
நான் வரும் வரை
தூங்காமல் விழித்திருக்கிறாள்🥺🥺🥺
மாதவிடாய்
வலி அவளை கொல்லும் போதும்
சிரித்துக் கொண்டே
என் ஆடைகள் துவைக்கிறாள்
வீட்டை சுத்தம் செய்கிறாள்
அன்பாக பேசுகிறாள்
அனைத்து வேலைகளையும்
சளைக்காமல் செய்கிறாள்🔥🔥🔥👌🏼👌🏼💯💯
சில இரவுகளில்
கட்டிலில் கலந்து
இனிப்பான இன்பம் தருகிறாள்🙈🙈😍😍
ஓர் நாள்
கர்ப்பம் ஆகி விட்டேன் என
காதுக்குள் சொல்லி
மார்பில் சாய்ந்தாள்❣❣
பக்குவமாக
குழந்தை போல் பார்த்துக் கொண்டேன்🤗🤗🤗
அவசரமாக
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன்🥺🥺🥺
ஒரு தாதிப் பெண்
என்னையும் உள்ளே
வர சென்னாள்
இப்போது
அவள் அருகில் நான்
கத்தினாள்
கதறினாள்
ஏதேதோ செய்தாள்😢😢😢😢
வலியால்
அவள் துடிப்பதை பார்த்து
என்னால்
தாங்க முடியவில்லை😢😢😢😢
அழ வேண்டும் என்றும்
நான் நினைக்க நினைக்கவில்லை
ஆனால்
என்னை அறியாமல்
கண்ணீர் வருகிறது
இந்த அன்புக்கு என்ன பெயர் என்று
எனக்கு தெரியவில்லை😭😭😭😭😭
சதை கிழிந்து
குழந்தை வெளியில் வரும் போது🙏🏾🙏🏾
அவள்
அடைந்த வலியை
கடவுள் கூட கவிதையில்
சொல்லிவிட முடியாது😞😞😞😞
பாதி குழந்தை
வெளியில் வந்திருகையில்
வலி தாங்க முடியாமல்
கைகள் இரண்டையும் எடுத்து
கும்பிட்டு அழுதாள்🙏🏾🙏🏾🙏🏾😭😭
எவ்வளவு
வலி இருந்தால்
அவள் கும்பிட்டு அழுதிருப்பாள்
என்று நினைக்கும் போது😓😓😓
நான் துடிதுடித்து
அவளை இருக அணைத்து கொண்டேன்👩❤👨
ஒரு பெரிய
சத்தமிட்டு மயங்கி சாய்ந்தாள்
ஒரு சில
நிமிடங்களில்
குழந்தையை கையில்
கொடுத்தார்கள்👶👶
நான்
அவள் நெற்றியில் முத்தம் வைத்து
இருக அணைத்து கொண்டேன்❤
அவள்
அனுபவித்த வலி என்பது
நிச்சயமாக மரணத்தின் ஒத்திகை
என்று உணர்ந்தேன்😓😓😓
மரியாதை
செய்யுங்கள்
எம் இறைவிகளுக்கு
நான் நேசிக்கும் மனைவிக்காகவும்
நான் நேசிக்கும் அம்மாவுக்காகவும்
இந்த உலகிழ் வாழும் பெண்களுக்காகவும்👸👸👸
இந்த
வரிகளை
சமர்ப்பிக்கிறேன்💯🙏🏾
நன்றிகள் கோடி
பெண்களே…💓☀👑👑👑
பகிருங்கள்
மணமான அனைத்து ஆண்களும்
மனம் ஆக போகும் ஆண்களுக்கும்
அனைவருக்கும் நினைவில் வரும்
என்றும் நினைக்கிறேன்
பெண்ணை போற்றுவோம்
தாய்மை மதிப்போம்.
முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்
