• Sun. Oct 12th, 2025

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

Byadmin

Sep 15, 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேலும் 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 184 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வன்முறை தொடர்பாக 1 முறைப்பாடும், சட்ட மீறல்கள் தொடர்பாக 181 முறைப்பாடுகளும், ஏனைய விதிமீறல்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அதன்படி, ஜூலை 31 முதல் இன்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,215 ஆக அதிகரித்துள்ளது.

பெறப்பட்ட மொத்த முறைப்பாடுகளில் 3,641 இற்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 574 முறைப்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *