• Fri. Nov 28th, 2025

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி பலி

Byadmin

Nov 1, 2024

மின்னல் தாக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பதென்ன பண்ணை பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (31) பிற்பகல் மின்னல் தாக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

தந்தையும் சகோதரனும் வீட்டின் பின்புறத்தில் அஸ்திவாரத்தை வெட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு உதவிய சிறுமியே இந்த அனர்த்தத்திற்கு உள்ளானார்.

இவரது சகோதரரும் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தந்தைக்கு விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *