• Mon. Jun 8th, 2026

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர்

Byadmin

Nov 5, 2024

யுத்தம் காரணமாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்துள்ளனர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் காரணமாகவே வடக்கு மக்களுக்கும், தென்னிலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் இல்லாமல் போனது.

யுத்த காலங்களில் தென்னிலங்கை மக்கள் வடக்கினை ஒரு யுத்த களமாகப் பார்த்ததுடன், வடக்கு தமிழ் மக்கள் தங்களது தென்னிலங்கை சிங்கள மக்களை தங்களது எதிரிகளாகப் பார்த்தனர்.

இதனூடாக அரசியல்வாதிகளே அதிகளவில் நன்மையடைந்தனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *